Breaking News

யாழில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் தாக்குதல் ; 5 பேர் படுகாயம்.!

யாழ்ப்பாணம், தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழை ந்த கும்பல் ஒன்று நடாத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்ததுடன் “கைதடி ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன் றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்கு தலை மேற்கொண்டும் கூரிய ஆயு தங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்த னர் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனா்.

உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவாகியுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் சாவ கச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.