Breaking News

"சொந்த விடயத்தில் மஹிந்தவை ஜனாதிபதி நியமிக்கவில்லை"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த விருப்பு வெறுப்புக்க ளுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பிரத மராக நியமிக்கவில்லை எனத் தெரி வித்த சுதந்திரக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி பொதுத் தேர்தலில் எவ்வாறு நாட்டின் நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற் காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கினாரோ அதேபோன்று தான் இம் முறையும் செயற்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளாா்.

தற்போது சுழ்நிலையில் புதிதாக ஒருவர் பிரதமராக நியமிக்கப்படும் சந்தர்ப் பத்தில் விரைவாக செயற்பட முடியாது. எனவே அரசியல் அனுபவமும் மக் கள் பலமும் கொண்ட ஒருவரை ஜனாதிபதி பிரதமராக தெரிவு செய்துள்ளார்.

அதற்கு சிறந்த உதாரணமாக கடந்த உள்ளூராட்சி தேர்தலை குறிப்பிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி விக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.