Breaking News

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் ஜே.வி.பி. சபாநாயகருக்கு கடிதம்.!

அரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கும், மக்கள் தீர்மானத்தினை மதிப்பதற்கும் ஒரே வழி பாராளுமன்றத்தினை உடன் கூட்டுவதே சிறப்பு.

ஆகவே இவ்விடயத்தில் அரசியலமைப் பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற தீர்மானங்களை மேற்கொள்ள பாராளுமன்றத்தினை கூட்டுமாறு மக் கள் விடுதலை முன்னணியினர் சபாநாயகருக்கு எழுத்து மூல மனுவை சமர்ப்பித்துள்ளனா்.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியானது சாதாரண மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெற்றோலிய வளங்கள் அமைச்சில் நடைபெற்ற சம்பவமும் இதன் பின்னணியினை மைய மாக கொண்டவை இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்க்கமான தீர்மானத் தினை எடுக்க வேண்டும்.

அரசியல் நெருக்கடியானது நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சர்வ தேசத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அனைவரும் ஒருமித்த கருத்தி னையே குறிப்பிடுகின்றனர். மக்கள் ஆணையினை மதித்து அரசியலமைப் பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை செயற்படுத்துங்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.