Breaking News

சபாநாயகர் நாடாளுமன்ற அமர்விற்கு சமூகமளிக்காமைக்கு காரணம் தெரிவித்த தினேஷ்!

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை விட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது தரப்பிலேயே பெரும்பான்மை இருப்பதால் சபாநாயகருக்கு முகங் கொடுக்க முடியாத காரணத்தினால் இன்று நாடாளுமன்ற அமர்விற்கு வருகை தரவில்லையெனத் தெரிவித் துள்ளார்.

மேலும் சபாநாயகர் ஒருவருக்கு பிரதமர் ஒருவரை நியமிக்கவோ அல்லது அகற்றவோ அதிகாரம் இல்லையென  கட்சித் தலைவர்களின் கலந்துரையாட லின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்ததாகத் தெரிவித் துள்ளாா்.

நிதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள ஆளும் கட்சிக்குக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் அது தொடர்பில் எதிர்க்கட்சியினர் எந்த தீர்மானத் தையும் முன்வைக்க முடியாதெனத் தெரிவித்துள்ளார்.