Breaking News

இன்றும் அமைச்சர்கள் சிலர் சத்தியப்பிரமாணம்.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை மேலும் சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துள் ளனா்.

குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. அதன்படி அமைச்சரவை அமைச்சர்கள் விபரம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன் னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பந்துல குண வர்த்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத் துள்ளனா்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக எஸ்.எம் சந்திரசேன சத்தியப் பிர மாணம் செய்துகொண்டார்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்கு விப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் வசந்த பெரேரா சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

நிதி இராஜாங்க அமைச்சராக அநுர பிரியதர்ஷன யாப்பா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சராக சாலிந்த திசா நாயக்க சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக சீ.பீ.ரத்நாயக்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனமும் இன்று இடம்பெற்றது. மூன்று அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று முற் பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சின் செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வர்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எஸ்.பீ. கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச் சின் செயலாளராக ஆர்.டபிள்யு. ஆர். பேமசிறி நியமிக்கப்பட்டுள்ளாா்.