Breaking News

சபையில் இரத்தம் சிந்தியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.

பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரண மாவார் என குற்றம் சுமத்தியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையி யற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கா தெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சபாநாயகர் மஹிந்த ராஜ பக்ஷ்வின் உரைக்கு வாக்கெடுக்க அனுமதித்ததாலே பாராளுமன்றத் துக்குள் இன்று குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் கட்சி சார்பாக நடந்து கொள்ளாமல் நேர்மையாக செயற்பட் டிருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக் காது.

சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரத்தம் ஓட்டப்படுவதற்கும் சபாநாயகரின் பக்கச் சார்ப்பான செயற்பாடே காரணமாகுமெனச் சுட்டிக்காட்டி னார். பாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் ஆளுங் கட்சியி னால் உறுப்பினர் அறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.