Breaking News

மஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்தது என்ன.?..

மஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் நடைபெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது,


இன்றைய அமர்வில் ஏற்பட்ட அமளி துமளியின்போது சபாநாயகரை அரச தரப்பினர் தாக்க முற்பட்டுக்கொண்டி ருந்த நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது ஆச னத்துக்கு அருகில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிக்க ரணவக்க எம்.பி காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது குறுக்கே வந்த அரச தரப்பின் லோஹான் ரத்வத்த எம்.பி சம் பிக்க ரணவக்கவை நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் அவரைத் தாக்கவும் முற் பட்டுள்ளாா்.

எனினும் குறுக்கிட்டு தடுத்த மஹிந்த ராஜபக்ஷ ரோஹான் ரத்வதவை அக ன்று செல்லுமாறு குறிப்பிட்டு சம்பிக்கவை தன்னருகே அழைத்து கைலாகு கொடுத்து தோளில் தட்டி சமாதானப்படுத்தியுள்ளாா்.

 இதேபோன்று தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுக்கொண்டிருந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட் சியில் இருந்து அரச தரப்புக்கு தாவிய ஆனந்த அளுத்கம எம்.பியை ரிஷாத் எம்.பி சமாதானப்படுத்த முயற்சித்தபோது அவரை தாக்க அலுத்கமகே எம்.பி முற்பட்டார் எனினும் ஏனைய சில உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.