Breaking News

மைத்திரிக்கு எதிராக உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.!

சிறிலங்கா ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றைக் கலைத்தார் என்றும் அதனை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரியும் இலங்கையில் மூன்று கட்சிகள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தை நாடுகின்றன.

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசி யக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன் னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே இவ்வாறு உயர் நீதிமன்ற த்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடா ளுமன்றைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி ஒன்றை வெளியிட்டார். அன்றைய நாள் முக்கியமான சில திணைக்களங்களை தனக்குக் கீழே கொண்டுவந்த ஜனா திபதி திடீரென நாடாளுமன்றைக் கலைத்துள்ளாா்.

இச் செயற்பாடு உள் நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் கடும் தாக் கத்தினைச் செலுத்தியிருந்தது. நாடாளுமன்றத்தில் அங்கம்வகித்த பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தமது கண் டனங்களை தெரிவித்துள்ளன.

உயர் நீதிமன்றத்தை நாடப்போவதுடன் இந்த நிலையிலேயே இன்றைய தினம் இது தொடர்பான வழக்குத் தாக்கலை உயர் நீதிமன்றத்தில் மேற்படி கட் சிகளால் தொடுக்கப்படவுள்ளன.