Breaking News

30 கோடிக்கு கட்சி தாவிய வியாழேந்திரன்.!

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளமையைக்  கண்டித்து மட்டக்களப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது மக்களால்.

இவ் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை நடை பெற்றதாகவும் மட்டக்களப்பு காந்திபூங்கா சதுக்கத்தில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக் கிய தேசியக் கட்சி சார்பான அரசியல் ஆர்வலர்கள், கலந்துள்ளனா்.

'மட்டக்களப்பு மக்களின் மானத்தைப் போக்கிய அமல், விலைபோக எல் லோரும் வியாழேந்திரன் இல்லை, ஜன நாயகமா பண நாயகமா நாடாளு மன்றத்தை உடன் கூட்டு, 30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் வேண் டாம், ரணில் பக்கம் ஜனநாயகவாதிகள், மஹிந்த பக்கம் கொலைகாரர்கள், ஜனாதிபதியே ஜனநாயகத்தைக் காப்பாற்று' என்ற கோசமிட்டதுடன் பதா தைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனா்.