Breaking News

முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்களின் வெறியாட்டம்.!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை இன்று சூறையாடியுள்ளனா்.

கனகராயன்குளம் பெரியகுளம் பகுதி யில் வசித்து வரும் முன்னாள் போரா ளியான பேரம்பலம் வசந்தகுமார் என் பவரது வீட்டை உடைத்து ஒரு இலட் சத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஏழு பவுண் நகை, தண்ணீர் இறைக் கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள் என்பன சூறையாடப்பட்டுள்ளதாக கனகராயன் குளம் பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு தொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளியான பே.வசந்தகுமாரின் நிலத்தை அப கரிக்கும் நோக்கத்துடன் ஆக்கி ரமித்திருக்கும் நபர் ஒருவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கிற்கு முன்னிலையாக சென்றிருந்த நேரத்தை பயன்படுத்திய திருடர் கள் சூட்சுமமான முறையில் வசந்தகுமாரின் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள் ளையடித்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர் பாக வவுனியா தடவியியல் பொலிசார் மற்றும் கனகராயன் குளம் பொலிசார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.