Breaking News

அரசியல் பரபரப்பினால் நாட்டை விட்டு வெளியேற திட்டமிடும் மஹிந்த.??

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மாலை தீவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வார இறுதியில் மஹிந்த ராஜ பக்ச மாலைதீவுக்குப் பயணமாக வுள்ள  தகவல்கள் வெளியாகியுள் ளன. மாலைதீவில் அண்மையில் நட ந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம்சோலி எதிர்வரும் 17ஆம் நாள் பதவியேற்கவுள்ள நிலை யில், குறித்த நிகழ்வில் பங்கேற்க இந் தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 17ஆம் திகதி மாலைத் தீவுக்குச் செல்லவுள்ள நிலையில் அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாட முடியுமென மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவுடனான எந்த அதிகாரபூர்வ தொடர்பாடல்களும் மேற்கொள்ளப்பட வில்லை.

இவ்வாறான நிலையில் மஹிந்த இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்து கலந் துரையாடலாமென ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவாகியுள் ளன.

எனினும் மஹிந்தவின் மாலைதீவு விஜயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.