Breaking News

மைத்திரியை மிரட்டிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர்.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு களை தொடர்ந்து சுமத்தினால் தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை உருவாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடகவியலாளர் களை சந்தித்த போது வெளியிட்ட குற் றச்சாட்டுக்களைத் தொடர்ந்து ஆத்தி ரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தனது டுவிட்டர் பக் கத்தில் இவ்வாறான எச்சரிக்கை யினை விடுத்துள்ளார்.

“பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில், உயர்மட்ட விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் செய்த தலையீடுகளை நான் ஒருபோதும், பகிரங்கமாகப் பேசியது கிடையாது, ஆனால், இந்த காட்டுத்தனமான குற்றச்சாட்டுகள் தொட ருமானால் உயர்மட்ட விசாரணைகளில் யார், எப்போது, எங்கே, எப்படித் தலை யீடுகளைச் செய்தார்கள் என்ற விபரங்களை நான் வெளிப்படுத்த நேரிடும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஊழல் நடந்தது என்று ஜனாதிபதி மைத்திரி பால குற்றம் சாட்டுவாரேயானால், அப்போது கூட்டு அரசாங்கத்தின் தலை வராக அமைச்சரவையின் தலைவராக இருந்த அவருக்கும் கூட அதில் சம மான பங்கு உண்டு.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், இந்த விசாரணைகளில் இருந்து அவரும் தப்பிக்க முடியாது. குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து பாது காப்புச் செயலாளருக்கு,

பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதமே ஜனாதிபதி மைத்திரி உத்தரவு பிறப் பித்தார் என்பதை காட்டுகிறது. ஜனாதிபதி மைத்திரியின் தலையீடுகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம். இது மூன்றரை ஆண்டு பழக்கத்தின் தொட ர்ச்சி தான்.” என தனது கருத்தினை பதிவிட்டுள்ளாா்.