Breaking News

மாவீரர்களின் இலட்சிய கனவுகளை நெஞ்சில் ஏந்துவோம் - வேல்முருகன் அஞ்சலி.!

தமிழீழ விடிவுக்காய் போராட்ட களம் புகுந்து தங்கள் இன்னுயிரை ஈகம் செய் திட்ட மாவீரர்களின் தியாகத்தை போற்றிடும் வண்ணமும், அவர்களின் தூய நல் தியாகத்தினை போற்றி அஞ்சலி செலுத்திடும் வகையிலும் ஆண்டுதோ றும் நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் தமிழீழம், தமிழகம் மட்டுமின்றி உல கம் முழுவதும் தமிழர் வாழும் பகுதி களிலெல்லாம் மாவீரர் நாள் அனுச ரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார் பில் நெய்வேலியில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் பின்னர் உரையாற்றிய அக் கட்சியின் தலைவர் வேல்முருகன், " இதோ இலட்சிய கனவுகளை நெஞ்சில் சுமந்து களம் புகுந்து அதற்காகவே தங்கள் இன்னுயிரை ஈகம் செய்திட்ட வீர மறவர் களுக்கு கலங்கிய நெஞ்சத்துடன் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

அதே சமயம், அந்த லட்சிய மாவீரர்களின் தாயக கனவினை நம் நெஞ்சிலேந்தி பயணிப்போம் என்ற உறுதியும் ஏற்கிறோம்" என நெகிழ்ச்சியாக பேசினார். நிகழ்வில் பொது மக்களும், வாழ்வுரிமை கட்சியினரும் அதிகளவில் கலந்து சிறப்பித்துள்ளனா்.