Breaking News

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் ; விசாரணைக்கு 3 நீதிபதிகள்

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமனமாகியுள்ளனா்.

அதன் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிக ளான பிரியந்த ஜயவர்தன, மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன் னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தனது நிறை வேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர் தலை நடத்த வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.

இந் நிலையிலேயே ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை யானது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும், அரசியலமைப் புக்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்துள்ளனா்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன் னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உட்பட மொத்தம் 10 மனுக்கள் உயர் நீதிமன்றில் இதுவரை தாக்கல் செய்துள்ளனா்.