Breaking News

ரணிலுக்கு மைத்திரி பச்சைக்கொடி? திருப்பமா? புதிய வியூகமா?

நிறைவேற்று அதிகாரமா? இல்லை நாடாளுமன்றமா? இந்த வினாவை மையப் படுத்திய இலங்கைத் தீவின் ஆட்டம் பரபரப்பாக ஆரம்பித்துள்ளது. இதில்அடிதடிக்காட்சிகளுக்கும் தள்ளுமுள்ளுகளுக்கும் இன்று இடமிருந்தன.

இப் பரபரப்பான ஆட்டத்தில் சளைக் காமல் பங்கெடுப்பவர்கள் சார்பில் ரணில் மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணி இன்று மாலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மைத்தி ரியைச் சந்தித்து பேச்சு நடத்தியது.

அப் பேச்சுக்களில்கைகேயி இடம் தசரதன் பெற்ற வரங்களைப்போல நாடா ளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை நிருபிக்கும் தரப்பை ஏற்றுக்கொள்வதாக மைத்திரி உறுதி மொழியை வழங்கியதாக செய்திகள்வந்தது வரை காலை முதல் மாலை வரை அதிர்வுகள் தொடர்ந்தன.

இவ் விடயம் குறித்துநாடாளுமன்றத்தில் தான் உரையொன்றை வழங்க விருப்பதாகவும் அதன்பின்னர் அடுத்துவரும் நாட்களில்இந்த விடயத்தை சுமு கமாக தீர்க்க உதவுவதாகவும் தெரியவருகிறது.

இச் சந்திப்பு கொதிநிலையற்ற ஒரு சிநேகபூர்வ சூழலில் நடைபெற்றதாக ஐக்கிய தேசியகட்சியின் பிரமுகர் ரவிகருணாநாயகக்கா கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகங்கள் உட்பட மஹிந்தவுக்கு எதிரான பிரேரணை யில் ஒப்பமிட்ட122 உறுப்பினர்கள் சார்பான முக்கியதலைகள் மைத்திரியை சந்தித்து இந்த வரங்களைப் பெற்றிருந்தால் இந்த நகர்வு முக்கியமானது.

ஆனால்இவற்றின் நடைமுறை சாத்தியங்கள் வினாவுக்குரியன ஏனெனில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்பை ஏற்றுக்கொள்வதாக மைத்திரி இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தால் இது மகிந்தவை பொறுத்தவரை மிக மோசமாககையறு நிலைக்கு அவரைத்தள்ளி அடுத்தகட்ட ஆட்டத்தின் தீவிரத்தை முடிவுசெய்யும்.

மறுபுறத்தே நாடாளுமன்றத்தில் மகிந்தவின் அரசாங்கத்துக்கு(?) எதிராகவும் ரணிலுக்கு ஆதரவாகவும் பெரும்பான்மையை நிருபித்த ஜனநாயக வகி பாகத்தின் முக்கிய கோரிக்கை இது.

இதனால் அவர்களுக்கு இது முக்கியமானது. ஆனால் ஏற்கனவே நிறைவேற்று அதிகாரத்தால் காயப்பட்ட அவர்கள் எவ்வாறு அதனை எய்தவருடன் அரசியல் சகவாழ்வை தொடரப்போகின்றனர் என்பதும் முக்கியமானது.

ஆனால் மாலையில் இந்தசந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னரேபோதும் போதும் என்றஅளவுக்குரியவகையில்இலங்கையின் பரபரப்புகள் கடந்திருந் தன.

முன்னதாக சபாநாயகர் கருஜயசூரியாவும் மைத்திரியும் காரசாரமான கடிதங் களைப் பரிமாறிய பின்னணியில் இன்று காலை மீண்டும்நாடாளுமன்றம் கூடியதும் இக் குழப்பங்களும் கூடவே வந்தன.

அரசாங்கத்திற்கு எதிராக நம் பிக்கையில்லா பிரேரணையொன்றை முன் வைக்க வேண்டிய விதம் அதனை நிறைவேற்ற பின்பற்றவேண்டிய விதி முறைகளை பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டதாக மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளாா்.

மறுபுறத்தே நாட்டின் முதற்குடிமகனான நீங்கள்தான் குப்புறத்தள்ளிய குதிரைகுழியை பறித்த கதையாகநாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக சபாநாயகர் போட்டுத்தாக்கியுள்ளாா்.

ஆக மொத்தம் அரசியலமைப்பை மீறியதாக இருவருமே ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிய நிலையில்தான் இன்றையநாடாளுமன்ற அமளிகளும் இடம்  பெற்றன. நாடாளுமன்றத்தில் பிரதமர் என்ற கோதாவில் மகிந்த உரையாற் றியுள்ளாா்.

அவரது உரையின் பின்னர்அதெல்லாம் சரி மகிந்தஅவர்களே நீங்கள் பிரதமர் என்கின்றீர்களே? அதற்குரிய பெரும்பான்மையை நிருபிக்க ஒரு வாக்கெடுப்பு ஆட்டத்தை நடத்துவோமா எனயானைகள் முகாமிலிருந்து லக்ஸ்மன்கிரி யெல்ல கோர மகிந்தா வாதிகளுக்குயதார்த்தம் உறைத்தது.

அவர்கள் குழம்பினர். மகிந்தாவாதிகள் குழப்பங்களை கண்ட ஐக்கிய தேசி யக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங் குவதற்காக அவரைசுற்றி வளைக்க அதனை மகிந்தாவாதிகள் ஊடறுக்க அங்கே ஒரு ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகவாதிகள் போர்வை குப்பைவாதிகள்சிலர் சபாநாயகர் மீது குப்பைக்கூடையை கூடவீசியெறிந்தனர்.

பிரியமான பொருட்கள்மீது அவர்களுக்கு பிரியமிருப்பது இயல்பானதுதானே ஆனால் கரு ஜயசுரியாயார்? அவர் கஜாபுயலுக்கே கடுக்காய் கொடுக்கும் திடத்தில் இருப்பதால்; இந்தகுப்பைத்தாக்குதலைலாவகமாக சமாளித்தார்.

ஆயினும் சபாநாயகர் மீதுஇவ்வாறு பொருட்களை எறிந்தசெயல் இலங்கைத் தீவின் ஜனநாயக பெருமைக்கு ஒரு கெட்ட நாள் என சிறிலங்காவுக்கான ஜேர்மன் தூதர்ருவிற்றியமை இச் செயல்களையெல்லாம் அனைத்துலக சமூகம் பார்த்துக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.

இந்த இழுபறிகளுக்கு மத்தியில்நாடாளுமன்றத்தில் பிரதமரையோ அவரது அமைச்சரவையோ ஏற்றுக் கொள்வதில்லை என கூறியபடி சபாநாயகர்கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளாா்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளியை அடுத்து, நாடாளு மன்ற வளாகத்துக்கு அதிரப்படையினர் வர வழைக்கப்பட்டனர். அதேபோல கொழும்பில் உள்ள அமைச்சகங்களுக்கும் அதிரப்படையின் பாதுகாப்பு வழங் கப்பட்டது.

 இதன்பின்னர் ஏற்கனவே திட்டமிட்டது போல ஐக்கியதேசிய முன்னணியினர் பெரும் எடுப்பில் வீதிக்குஇறங்கி மைத்திரி மகிந்தஅரசாங்கத்தை வலம் இடமாக வறுத்தெடுத்தனர்.

இயலுமானால் அரச தலைவர் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்ததத் தயார் என அவர்கள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்தனர். யானைகள் முகாமின் முன்னணி முகங்களான ரணில் மற்றும் சஜித் பிரேமதாசஆகியோரும் இந்த பேரணியின் முன்னரங்குக்கு வந்திருந்தனர்.

மறுபுறத்தே தேர்தல் ஒன்றுவந்தால் எவ்வாறு வாக்காளர்களை கட்டுக்குள் வைத்திருப்பது என்ற தந்ரோபாயத்துக்காக இன்று நள்ளிரவில் இருந்து எரிபொருளின் விலை மேலும் குறைக்கப்பட்ட நகர்வு தோட்டத் தொழி லாளர்களுக்கு தினச்சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதற்கான முனைப்புகள் போன்ற நகர்வுகளில் மகிந்ததரப்பு தீவிரம் காட்டியுள்ளது.

ஆகமொத்தம் தற்போது நடைபெறும் ஆட்டம் தனியே நாடாளுமன்றத்தை மையப்படுத்திய இழுபறியல்ல மாறாக இது நிறைவேற்று அதிகாரமா? இல்லை நாடாளுமன்றமா? என்ற அதிகார நிலைப்போட்டியின் ஒருவடிவமே.

ஏனெனில் இங்கு மைத்திரியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக நாடாளு மன்றத்தின் பெரும்பான்மைப்பலம் என்றபதில் போட்டிக்களத்தில் உள்ளது. இந்தபோட்டிக்களத்தில் சமரசம் செய்யத்தயாரில்லை என்ற வகையில் மைத்திரி சபாநாயகர்கருஜயசூரியாவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றம் நாளை கூட்டப்படுமென சபாநாயகர்கரு அறிவித்திருக்கிறார். அதுபோல நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை உள்ளதரப்பை ஏற்றுக்கொள்வதாக மைத்திரியிடம் இருந்து உறுதி மொழியை பெற்றிருக்கின்றார்.

ஆகையால் இன்றைய சந்திப்புக்குரிய பெறுபேறுகள் ஐக்கிய தேசியக்கட்சி விரும்பும் பச்சை வர்ணத்தில் மைத்திரியிடமிருந்து பச்சை அட்டையாக வந்தி ருப்பதாக இப்போதைக்கு கருதலாம்.

ஆனால் இந்த பச்சைஅட்டைக்கு பின்னால் ஏதாவதுசிவப்பு அட்டைகள் உண்டா?மீண்டும் நாளையும் நாடாளுமன்ற இழுபறிகள் நீட்சியுறுமா? நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்பை ஏற்றுக்கொண்டால் ஒவ்வாத தரப்புடன் மைத்திரியின் கூட்டுக்குடித்தனம் எப்படிச்செல்லும்? தானே கொலுவேற்றிய பிரதமர் மகிந்தவின் நிலை என்ன? இவைபோன்ற பல வினாக்கள் பதிலுக்காக காத்திருக்கின்றன.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -