Breaking News

மைத்திரி-மஹிந்த அவசர சந்திப்பு! தேர்தல் களத்தில் எக் கட்சியில் மஹிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகி யோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலின் பின்னர், ஐக் கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் முறை தொடர்பாக கலந்துரை யாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போட்டியிடும் கட்சி மற்றும் இலட்சினை குறித்தும் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாமரை மொட்டு இலட்சினையின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப் பொன்று நேற்றிரவு  நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவித்துள்ளன.