Breaking News

நீதிமன்ற வளாகத்தில் அதிரடி! தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்!!

ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்,



நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மன்றிற்கு வருகைதந்த மஹிந்தவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை கேலி செய்த சம்ப வத் தினாலேயே இவ்வாறான பதற்ற நிலை உருவாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் உதயகம்மன்பில ஆகியோரை நீதிமன்ற வளாகத்தில் கூடிநின்ற பொது மக்கள் திருடன் திருடன் என்றும் தவளை என்றும் கூச்சல் போட்டு கேலி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை கேலி செய்த மக்களை நோக்கி பதிலுக்கு சத்திமிட்டுள்ளனா்.

இதன் காரணமாகவே நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று பதற்ற நிலை ஏற்பட் டுள்ளது. எவ்வாறாயினும் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காது வேடிக்கை பார்த்துள்ளனா்.

இச்சம்பவத்தையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாகனத்தி லேறி நீதிமன்ற வளாகத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனா்.