Breaking News

மஹிந்த விடுத்துள்ள பெரும் சவால்.!

நாடாளுமன்ற தேர்தல் தற்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ள  காரணத்தால் அதனை யாராலும் நிறுத்த முடியாதென ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்தராஜபக்ச தெரிவித் துள்ளாா்.

சிறிலங்காவில் நிலவுகின்ற நிலமை தொடர்பில் சர்வதேசமானது விளக் கத்தினைப் பெற வேண்டுமென இந் தியா டுடே பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள நிலையிலேயே இவ் வாறு விவரித்துள்ளாா்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேசமானது இதனை ஜன நாயகவாத செயலென்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். நாம் மக்கள் மன் றுக்கு செல்லவுள்ளோம். மக்களினது விருப்பத்தினை நாம் பெறுவோம். அத னைத் தொடர்ந்து நாம் சர்வதேசத்தைச் சந்திப்போம்.

சர்வதேசமானது எமது ஸ்திரத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துளார். மேலும் நாம் தற்போதும் அதனை நடைமுறைப்படுத்தி யுள்ளோம். ஜனாதிபதி மைத்திரி சர்வதேசத்தினை அழைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து நானும் சர்வதேசத்தினைச் சந்திக்கவுள்ளேன். நான் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததும், அவர் எனது நோக்கத்தினை ஏற்றுக் கொண்டார். 19ஆம் சீர்திருத்தமென்பது என்ன? என அறிந்து கொள்வதற்கு 19ஆம் சீர்திருத்தத்திலுள்ள அனைத்துச் சரத்துக்களை யும் வாசிப்பது அவசியமாகும்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குத் தேர்தலை அறிவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது ஜனநாயக விரோத செயல் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.