Breaking News

வண்ணத்துப்பூச்சி என்ற வார்த்தையை பிரயோகிக்கவில்லை மைத்திரி.!

அரசாங்கத்துக்கு ஆதரவாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற கூட் டத்தில் யாரையும் பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தும் வகையில் வண் ணத்துப்பூச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரயோகிக்கவில்லை.

அது ஒரு அப்பாவி உயிரினம் எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் களான கெஹெலிய ரம்புக்வெல மற் றும் மஹிந்த சமரசிங்க, ரணில் மற் றும் அவரைச் சுற்றியுள்ள தரப் பினரே நாட்டின் அனைத்து தீர்மானங்களை யும் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள் ளாா்.

அரசாங்க தகவல் திணைக்களததில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச் சரவை முடிவுகளை தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.