Breaking News

ரணிலின் முகத்தில் அறைந்த மைத்திரி; அதிர்ச்சியில் ஐ.தே.க.!

முடிந்தால் கடாபிக்கு வந்த நிலையை தனக்கும் வர வைக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று பிரதமர் நியமனம் வழங்கிய பின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கள் முன்வைத்து அவர் இதனை முகத் தில் அறைந்தாற் போல் தெரிவித்துள் ளாா்.  “மத்திய வங்கி மோசடி, இரா ணுவ வீரர்கள் மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள்.

இன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந் தேன். கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந் தால் அப்படி செய்யுங்கள்.” என்றார்.

 இதன்போது அதுகிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசவில்லை. ஜனாதிபதியின் மேற்படி உரை இன்றைய தினம் ஊட கங்களுக்கு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.