Breaking News

உயர்நீதிமன்றத் தீர்ப்பு விடயத்தில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் கருத்து!

இலங்கை மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகிய வற்றால் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக நேற்று மாலை, தகவல் வெளியா னதை அடுத்தே, அவர், இலங்கை மக் கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங் கள், நீதி மன்றம் ஆகியவற்றால் தான், இது நடத்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள் சமந்தா பவர், “இது இலங்கையின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி” எனத் தெரி வித்துள்ளாா்.

“இதிலிருந்து மைத்திரிபால சிறிசேன செய்தியைப் பெற்றுக் கொள்ள வேண் டும். பிளவுகள் ஆழமாக முன்னர் இந்த பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என் பதைப் பற்றிய சிந்தனையை நோக்கி நகர வேண்டும்” எனத் தெரிவித்துள் ளாா்.