Breaking News

மன்னாரில் திடீரென வீடுகளினுள் புகுந்த கடல் நீர்.!

மன்னாரில் சில கிராமங்களில் நேற்று காலையிலிருந்து கடல் நீர் கிராமங் களுக்குள் உட்புக ஆரம்பித்துள்ளது.

சாந்திபுரம்,சௌத்பார், எமில் நகர், ஜிம் ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக் கோட்டு கிழக்கு,மேற்கு ஆகிய கிராம ங்களுக்குள், கடல் நீர் படிப்படியாக உட்புக ஆரம்பித்துள்ளதால், வீடுக ளும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.

மன்னார் புதையிரத வீதி பிரதான வீதி யில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது. பாதிக்கப் பட்ட கிராமங்களை கிராம அலுவலகர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கடல் நீர் உட்புகுவதைக் கட்டு படுத்தாது விட்டால் குறித்த கிராமங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் கடல் நீரால் சூழப்படும் அபாய நிலமை ஏற்பட்டுள் ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.