Breaking News

மைத்திரியின் அத்துமீறல்களால் குடியுரிமை பறிபோகும் அபாயம் - எச்சரிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பினை மீறி செய ற்பட்டுள்ளமையினால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரே ரணையை கொண்டு வர முடியும் எனவும் அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும் எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேர ணையின் மீது உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிறிசேன பலமுறை அரசி யலமைப்பை மீறியிருக்கிறார். தொட ர்ந்தும் அத்தகைய மீறல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளாா்.

ரணில் விக்கிரமசிங்கவை அவர் பதவிநீக்கம் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. மஹிந்த ராஜபக்சவை அவர் பிரதமராக நியமித்ததும், அரசியல மைப்பு மீறலாகும். அதேபோல நாடாளுமன்றினை கலைத்து உத்தர விட்ட மையும் அரசியலமைப்பை மீறிய செயல் எனத் தெரிவித்துள்ளாா்.

இவ்வாறு அரசியலமைப்பினை மீறும் செயல்களினால் அவர் அவரது குடியுரி மையையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும், அதேபோல ஜனாதிபதி சிறிசேன குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை எதிர்கொள்ளும் நிலை ஏற் படுமென எச்சரிக்கை விடுத்துள்ளாா்.