Breaking News

பொறியில் சிக்கினார் மைத்திரி.! கசிந்தது புதிய தகவல்!!

இலங்கை நாடாளுமன்ற கலைப்புத் தொடர்பான தீர்ப்பு இன்று மாலை நான்கு மணிக்கு வெளிவரவுள்ள நிலையில் ரணில் தரப்பும் மைத்திரி-மஹிந்த தரப் பும் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனா்.

தீர்ப்பு இவ்வ்வாறு தான் அமையப் போகின்றது என்பது தொடர்பில் தெளி வான தகவல்கள் இதுவரை கிடைக் காத நிலையில் குறித்த தரப்புக்கள் சற்றுக் குழப்பமான நிலையில் உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை க்கு எதிரானதாக நீதிமன்றத் தீர்ப்பு அமை யுமாயின் அந்த தீர்ப்பை முன் னிறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் திட்டமிட்டுள் ளனா்.

அதேநேரம் தீர்ப்பு மாறுமாயின், அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரிதான் என ஒரு தீர்ப்பினை மைத்திரிக்குச் சாதகமாக நீதிமன்றம் வழங்கு மாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தீர்ப்பு வெளிவர இன்னும் சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் இலங்கையில் பலமான எதிர்பார்ப்புக்கள் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.