Breaking News

மைத்திரி! சம்பந்தனின் சானக்கியம் வெல்லுமா?

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக் கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளனா்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க வின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனி மேல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணி கூட்டு வைத்துக் கொள்ளாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரி பால சிறிசேன நேற்று முன்தினம் இரவு தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளாா்.

 எனினும், தனிநபர்களாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்பவர்களை தடுக்கமாட்டேன் என்றும், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்ப டாது எனவும் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் தமது பிரதிநிதிகளால் தம்மை புதிய அர சாங்கத்தில் வைத்திருக்க விரும்பினால் அவ்வாறு செயற்படத் தாம் தயா ராக இருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதான தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியும் என்றும், கூட்டமைப் பின் நிபந்தனையற்ற ஆதரவு நல்லதல்ல என்றும் தயாசிறி ஜெயசேகர தெரி வித்துள்ளாா்.

உறுதியான நிலையைப் பேணுவதற்காக, அதிபரின் பிரதிநிதிகளாக, ஆதரவ ளிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கூடுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இயங்கு வதை விரும்பாத சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந் திரக் கட்சியைக் கொண்டு, கூட்டமைப்பின் ஆதிக்கத்தை முறியடிக்கத் திட்ட மிட்டுள்ளார் என்பது தெரிவாகின்றது.

இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை இணைத்து முக்கிய அமைச்சுப் பதவிகள் சிலவற்றை வழங்க மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.