Breaking News

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிப்பு.!

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 12 வது நினைவுதினம் இன்று மட் டக்களப்பு தாமரைக்கேணி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன் னனியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட இணைப்பாளர் த .சுரேஷ் தலைமையில் தீகை சுடர் ஏற்றியது டன் அன்ரன் பாலசிங்கதின் படத் திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட் டுள்ளது.

 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் இன்று மதியம் அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற இன் நிகழ்வில் காணா மல் போனவர்களின் உறவுகள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோ சகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்க ளுக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவா்களும் எமது இணையம் சார்ந்த இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.