Breaking News

அவசர சந்திப்பு நடாத்திய மைத்திரி-மஹிந்த.!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெறவுள்ளது.

இன்று இரவு குறித்த கலந்துரையா டல் நடைபெற உள்ளதாக நாடாளு மன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கலந் துரையாடல் நடைபெறும் நேரம் இது வரையில் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சித் தலை வர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றுள் ளது.

விஜேராம பகுதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல் லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.