Breaking News

அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசியல் கைதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட் டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனது வழக்குகளை துரிதப்படுத்தி தன்னை விடுதலை செய்யுமாறு கோரியே  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளாா்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 வயது டைய சிவப்பிரகாசம் சிவசீலன்  விடு தலை செய்யக் கோரி கடந்த 5 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவ ருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவத் தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அசிரத்தையும் அக்கறையின்மையும் அவருடைய விடுதலை யைத் தாமதிக்க வைத்துள்ளது.