Breaking News

வடக்கு ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளாா்.!

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பாக கலந் துரையாடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்க ளுக்கான புதிய ஆளுநர்களை நியமித் திருந்தார். இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நிய மிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டி ருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் அதாவுட சென விரத் தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட கலாநிதி விக்கினேஸ்வரன் மற் றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமள் ஆகியோரின் பெயர் களும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிகின்றது. எனவே இன்னும் சில தினங்களுக்குள் வட மாகாணம் உட்பட ஏனைய நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளாா்.