Breaking News

மைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென - சம்பந்தன்

இனவாதம், பிரிவினையை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த தரப்புக்களைச் சேர்ந் தோர் ஓரணியில் நின்று புதிய அரசியலமைப்பை வெற்றி பெறச் செய்ய அர்ப் பணிப்புடன் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு கூறிய அவர், நாட் டைப் பிரிப்பதோ, துண்டாக்குவதோ எமது நோக்கமல்ல.

நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை நாம் அடைந்திட வேண் டுமென்பதுடன் இதுவே எமது நிலைப்பாடு.

இதில் நாம் உறுதியாக உள்ளோம். குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட இன வாதிகள், பிரிவினைவாதிகள் புதிய அரசமைப்பு விவகாரத்தை தங்கள் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கின்றனர்.

இதைப் பார்த்து நாம் சோர்ந்துபோக மாட்டோம் பின்வாங்க மாட்டோம். எமது பணி தொடரும். எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து முழு மூச்சுடன் நாம் பயணிப்போமெனத் தெரிவித்துள்ளாா்.