Breaking News

தமிழ் மக்களைத் தலைமை தாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்.!

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமை தாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே எனத் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப் பட்டு வந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள்.

தாயகத்தில் தமிழ் மக்களை தலை மைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு: 48.09% வீதமா னவர்கள் (27,720 வாக்குகள்) சி.வி.விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமான வர்கள் (10,768 வாக்குகள்) இரா. சம்பந்தர் என்றும்,

13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்)கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என் றும், 3.9% வீதமானவர்கள் (2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்றும் வாக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

லங்காசிறி இணையத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் இலங்கை, இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 57,640 பேர் கலந்துகொண்டுள்ளனா்.