Breaking News

வரவு-செலவு திட்டத்திற்கு முன்னர் சுதந்திர கட்சியின் பலர் எம்முடன் இணைவு - ஐ.தே.க

மார்ச் மாதம் வரவு-செலவுத் திட்ட த்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யில் இருந்து 20 க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியு டன் இணைந்துகொண்டு வரவுசெலவு திட்டத்தை வெற்றிபெறச் செய்வது டன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் வரவு செலவு திட்டத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து வினாவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.