Breaking News

இலங்கையில் மறுபடியும் முடங்கின சமூக ஊடகங்கள் !

நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலைகளையடுத்து மீண்டும் சமூக ஊட கங்களின் செயற்பாடுகளை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளது.

குறிப்பாக வட்ஸ் அப், வைபர், பேஸ் புக், ஐ.எம்.ஒ., செனப்சட், இன்ஸ்டர் கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊட கங்களின் செயற்பாடுகளை உடன் அமுலாகும் வரையில் மறு அறிவித் தல் வரை தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளது.

இதேவேளை, குறித்த சமூக ஊடகங்களின் முடக்கம் தற்காலிகமானதென அர சாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட பின்னூட்டத்தால் சிலாபம் நகரில் கல வரம் ஏற்பட்ட நிலையில் அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இனங் களுக்கிடையில் முறுகலை தோற்றுவித்ததன் குற்றச்சாட்டில் பேஸ்புக்கில் பின்னூட்டம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளாா்.