Breaking News

மன்னார், மாந்தை மனித புதை குழி வழக்கு விசாரணை இழுத்தடிப்பு.!

மன்னார் மற்றும் மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணைள் எதிர் வரும் 17 ஆம் திகதி வரை இழுத்தடிப்பு.!

மன்னார், திருகேதீஸ்வரம், மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரனைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி வரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இரு வழக்குகளும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீத வான் ரி.சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த வழக்கு விசாரனைகள் நடைபெற்றுள்ளது.

விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த இரு வழக்கு விசார னைகளையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைத் துள்ளாா்.

நேற்றைய தினம் மன்னார் மனித புதைகுழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பான விடயங்களை் முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதி லும் எந்தவித சமர்ப்பிப்புக்களும் நடைபெறவில்லை.

அதே நேரத்தில் திருகேதீஸ்வர மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச் சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புக்களும் நடைபெற வில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.