Breaking News

கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது.!

வங்காலை பகுதியில் கடல் அட்டைகளுடன் சந்தேக ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து வங்காலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோ தமாக கடல் அட்டைகளை பிடித்து மறைத்து வைத்திருந்த போதே குறி த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 720 கிலோ கிராம் தொகை கடல் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித் துள்ளது. சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.