Breaking News

வடக்கு மார்க்கத்திலான 4 ரயில் சேவைகள் நாளை மறுதினம் இரத்து.!

வடக்கு மார்க்கத்திலான 4 ரயில் சேவைகளை நாளை மறுதினம் (20ஆம் திகதி) இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தில் பொல் கஹவெலயில் இருந்து பொத்து ஹெர வரையிலான மார்க்கத்தில் நடைபெறவுள்ள மார்க்க புனரமைப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக் கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக் களம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, மீனகயா கடுகதி ரயில், தலைமன்னார், காங்கேசன்துறை மற் றும் திருகோணமலை ஆகிய பகுதிக ளுக்கான இரவு ​நேர தபால் ரயில்கள் என் பனவும் இரத்து செய்யப்படவுள்ள தாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து மஹவ சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் ரயில், கொழும்பு – கோட்டை முதல் கனேவத்தை மற்றும் காங்கேசன்துறை யில் இருந்து கொழும்பு – கோட்டை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் கள் மாத்திரம் நாளை மறுதினம் வடக்கு ரயில் மார்க்கத்தில் சேவையில் ஈடு படுத்தப்படவுள்ளன.

இதனிடையே, எதிர்வரும் 21ஆம் திகதி கனேவத்தயில் இருந்து கொழும்பு – கோட்டை வரை சேவையில் ஈடுபடும் ரயில் ஒரு மணித்தியாலம் தாமதாக பயணத்தை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.