Breaking News

ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் ; இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் சாட்­சியம்.!

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தில் ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கி­யுள்ளாா். 

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில் பல்­வேறு காணொளி ஆதா­ரங்­களை வெளியிட்டுள்ளாா்.

பேட்­டியில் வெளியி­டப்­பட்ட ஆவ­ணங்கள் மற்றும் காணொ­ளிகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணைப் பிரி­வினால் கோரப்­பட்­ட­தற்­கி­ணங்க, அருண்காந்த் நேற்று திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கியுள்ளாா்.

அதன்­படி காலை 9 மணி­யி­லி­ருந்து பிற்­பகல் ஒரு மணி­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து, காணொளி ஆதா­ரங்கள் அடங்­கிய கைய­டக்கத் தொலை­பேசி மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காகப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­களின்போது இத்­த­கைய செயற்­பா­டு­களில் ஏன் ஈடு­ப­டு­கின்­றீர்கள்? உங்­க­ளு­டைய இலக்கு என்ன?" என்ற அதி­கா­ரி­களின் கேள்­விக்கு, முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்­லாவு­டனோ அல்­லது முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரு­டனோ எமக்கு எது­வித தனிப்­பட்ட பிரச்­சி­னை­களும் இல்லை.

ஆனால் ஹிஸ்­புல்லா மத­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தொடர்ச்­சி­யாக செயற்பட்டு வந்தமையாலேயே நான் இவ்வாறு அவருக்கெதிராக ஆதா ரங்களைப் பகீரங்கமாக வெளியிட்டேன்" என்று பதிலளித்ததாக அருண்காந்த் தெரிவித்துள்ளாா்.