Breaking News

சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதி விடும் பேஸ்புக், யூ டியுப் சமூகவலைத்தளங்களை முடக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத்தளங்களில் காணப்ப டும் சுதந்திரத் தன்மை கேள்விக் குறி யாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் அபிப்பி ராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு சாதகமான பின் னணியொன்றை உருவாக்கிக் கொள் ளும் வகையில் சமூகவலைத்தளங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள் வது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் இன்று திங்கட் கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்...,

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதி விடும் நபர்களின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் யூ டியுப்பை மைய மாகக் கொண்டியங்கும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு இடை யூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில வாரகாலமாகப் பல்வேறு நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு பலரிடமிருந்து முறைப் பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனை ஆராய்ந்து பார்த்ததிலிருந்து முடக்கப்பட்ட, சைபர் தாக்குதலுக்கு உள் ளான பேஸ்புக் கணக்குகள் என்பன ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்ச்சித்தமை வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனம் தற் போது அரசியல் செல்வாக்குகளின் அடிப்படையிலலேயே செயற்பட்டு வரு கின்றது.

அதேபோன்று பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் பக்கச் சார்பான மொழிபெயர்ப்புப் பணியாளர்களும் தவறான புரிதலினாலும் இவ் வாறு பலரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது. இத னூடாக அதிகளவிலானோர் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் யூ டியுப் ஆகிய சமூக வலைத்தளங்களை எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு சாதக மான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட் டுள்ளன.

கடந்த 2015 இல் முந்தைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பிரசாரங்களை இந்த சமூகவலைத்தளங்களில் ஊடாக முன்னெடுத்த இளைஞர், யுவதிக ளுக்கு இலவல வை-பை மற்றும் கூகுள் பலூன் வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து நாம் எமது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறோம்.

அதேபோன்று நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை மாற்றியமைத்து அர சாங்கத்திற்கு சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்வதுடன், எதிரணியின் கொள்கைகளை பின்தள்ளும் வகையில் சமூக வலைத் தளங் களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது குறித்து பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.