Breaking News

மக்கள் சக்தியின் இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டம் இன்று ஆரம்பம்

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான சக்தியாகத் திகழும் மக் கள் சக்தி மீண்டும் மக்களை சந்திப்பதற்குத் தயாராகியுள்ளது. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டத்தின் ஊடாக நாம் உங்களை சந்திக்க ஆயத்தமாகியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனா்.

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் இதற்கு முன்னர் 3 தட வைகள் நாடு முழுவதும் முன்னெடுக் கப்பட்டது. இதன்போது, தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் கண்டறியப்பட் டன.

அப் பிரச்சினைகளுக்கு மக்களின் நிதியுதவியில் விரைந்து தீர்வு வழங்குவ தற்கு மக்கள் சக்தி குழு முன்வந்தது. எம்முடன் இணைந்துகொண்ட மக்கள், பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் எமது நன்  றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு இடங்களில் பூர்த்திசெய்யப்பட்ட செயற்றிட்டங்களைக் கவனத்திற் கொள்ளும்போது, நாடளாவிய ரீதியில் மக்கள் சக்தி குழுவினர் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளமை உறுதியாகின்றது.

அந்தவகையில், 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையிலான மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டம் இன்று (18) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் இத் தடவையும் மக்கள் சக்தித் திட்டத்துடன் இணைய உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.