Breaking News

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்குள் நேற்றிரவு (10ஆம் திகதி) தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இர ண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக, மொற ட்டுவை தீயணைப்புப் பிரிவு தெரிவித் துள்ளது. தீயினால் பொறியியல் பீடத் தின் சொத்துக்களுக்கு சேதமேற்பட் டுள்ளது.

கண்காட்சி ஒன்றுக்காக தயாரிக்கப்பட்ட காரொன்றைப் பரிசோதனைக்குட் படுத்திய சந்தர்ப்பத்தில் மின் ஒழுக்கினால் தீ பரவியுள்ளதாக, மொறட்டுவை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.