Breaking News

ஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?

கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் ­ப­குதி வளா­கத்­தி­லுள்ள பழைமை வாய்ந்த பிள்­ளையார் ஆல­யத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்­சிக்கு எதி­ராக தென்­க­யிலை ஆதீன அடி­களார் குரு­மு­தல்வர் அகத்­திய அடி­க­ளாரின் தலை­மையில் நேற்று நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது பதற்­ற­மான நிலை ஏற்­பட்­ட­துடன் ஆர்ப்­பாட்­டத்­துக்கு பொலிஸார் தடையும் விதித்துள்ளனா். 

அத்­துடன் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­ப­டக்­கூ­டாதென பெரும்­பான்­மை­யின மக் கள் அச்­சு­றுத்தும் தொனியில் தெரி­வித்­த­தை­ய­டுத்து தென்­க­யிலை ஆதீன அடி­களார் குரு­மு­தல்வர் அகத்­திய அடிகளாரின் கோரிக்­கை­யை­ய­டுத்து நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதன்­போது பொது மக்­க­ளுக்கும் பொலிசா­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­ற­துடன் உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல் வோம் என பெரும்­பான்­மை­யினர் சிலர் கன்­னியா குரு முதல்வர் அகத்­திய அடி­க­ளா­ரை­யும் தர்ம கர்த்­தா­வையும் அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கன்­னியா வெந்­நீ­ருற்­றுப்­ப­கு­தியை பௌத்த மய­மாக்­கவும் இவ்­வா­ள­கத்­தி­லுள்ள பழமை வாய்ந்த பிள்­ளையார் ஆல­யத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் ஒன்று அமைக்கும் முயற்­சிக்கு எதி­ராக தென்­க­யிலை ஆதீன அடி­களார் குரு­மு­தல்வர் அகத்­திய அடி­க­ளாரின் தலை­மையில் கன்­னியா மர­பு­ரிமை அமைப்பு இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த அமை­தி­வழி கவ­ன­யீர்ப்பு போராட்டம் நேற்று நடை­பெற்­றது.

2000 மேற்­பட்ட இளை­ஞர்கள் யுவ­திகள் புத்­தி­ஜீ­விகள் பொது மக்கள் சுமார் 10 மணி­ளவில் ஒன்று கூடி­யி­ருந்­தனர். அவர்கள் கன்­னியா பிர­தான வீதியில் ஒன்று கூட­வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டது.

போராட்டம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே கன்­னியா பிர­தான வீதியில் இரா­ணு­வமும் பொலீ­ஸாரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் கன்­னியா நீரூற்­றுக்கு செல்லும் வழியும் தடைகள் போட்டு பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்தின் பலத்த பாதுகாப்பு இடப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு இடையில் கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு செல்லும் பிர­தான நுழை­வாயில் அடைக்­கப்­பட்டு பொது­மக்கள் செல்­லா­த­வாறு பொலிசார் ­காவல் காத்து நின்­ற­துடன் நீரூற்று வளா­கப்­ப­கு­தி­யிலும் பெருந்­தொ­கை­யான பொலி சார் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

10 மணி­ய­ளவில் 2000 க்கும் மேற்­பட்ட மக்கள் ஒன்­று­கூடி பிர­தான வீதி­யி­லி­ருந்து கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு அமை­தி­யான முறையில் செல்ல முற்­பட்­டனர் அவ்­வேளையில் பொலிசார் தடை­களையிட்டு கன்­னி­யா­வுக்குள் செல்­வ­தற்கு அனு­ம­தி­யில்லை என்றும் இதற்­கான தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் தெரி­வித்­த­துடன் உப்­பு­வெளி பொலிஸ்­நி­லைய பொறுப்­ப­தி­காரி தடை­யுத்­த­ர­வுப்­பத்­தி­ரத்தை தலைமை தாங்­கிச்­சென்ற ஆதீன குரு­மு­தல்­வ­ரிடம் காண்­பித்தார்.

இத­ன்­போது ஆதீன குரு­மு­தல்வார் நாம் ஆப்­பாட்டம் செய்­யவோ அல்­லது யுத்தம் செய்­யவே வர­வில்லை அமை­தி­யான முறையில் கன்­னியா பிள்­ளையார் ஆல­யத்தை வழி­பட அனு­மதி தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். எனினும் அவரின் கோரிக்கை அதி­கா­ரியால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இத­னை­ய­டுத்து வந்­தி­ருந்த மக்­க­ளுக்கும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கும் இடை யில் வாக்­கு­வாதம் நிகழ்ந்­தது. அதைத்­தொ­டர்ந்து கன்­னியா குரு­மு­தல்வர் அகத்­திகள் அடி­களார் மற்றும் கன்­னியா பிள்­ளையார் ஆலய தருமகர்த்தா ஆகிய இரு­வ­ருக்கு மட்டும் ஆலய வளா­கத்­துக்கு செல்ல அனு­ம­தி­வ­ழங்­கப்­பட்ட நிலையில் பொலிசார் பிர­தான வீதி­யி­லி­ருந்து சுமார் 500 மீற்றர் தொலை­வி­லுள்ள வெந்­நீ­ரூற்­றுப்­கு­திக்கு இரு­வ­ரையும் அழைத்து சென்­றனர்.

அப்­போது பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு முன்­பா­கவே உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல்­லுவோம் என பெரும்­பான்­மை­யின மக்கள் கன்­னியா குரு முதல்வர் அகத்­திய அடி­க­ளா­ரை­யும் தர்ம கர்த்­தா­வையும் அச்­சு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு முன்­பி­ருந்த தமிழ் வர்த்­த­கர்கள் கடை­க­ளை­பூட்டி சென்­றுள்­ளனர். ஏனைய இனத்­த­வர்­க­ளது கடைகள் திறந்­தி­ருந்த நிலையில் இக்­க­டைக்கு வெளியே நூற்­றுக்­க­ணக்­கான பெரும்­பான்­மை­யின மக்கள் கூடி­யி­ருந்­தனர்.

தென்­க­யிலை சுவா­மி­களும் தர்ம கர்த்­தாவும் தமக்கு நேர்ந்த அவ­மா­னத்தை பொலிஸ்; அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்டும் அவர்கள் பொறுப்­பெ­டுக்­க­வில்லை. முறைப்­பாடு செய்தால் மாத்­தி­ரமே சம்­மந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்ய முடி­யு­மென கூறினர்.

இச்­சம்­ப­வத்­தினால் நிலமை கட்­டுக்­க­டங்­காது; போன நிலையில் பொது மக்­க­ளுக்கும் பொலீ­சா­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. நிலைமை கட்­டு­மீற இருந்த நிலையில் ஆதீ­னத்தின் கௌர­வத்தை காப்­பாற்­றுங்கள் வன்­ந­டத்­தைகள் வேண்­டா­மென சுவாமி கோரிக்கை விடுத்தார்.

இத­னை­ய­டுத்து நிலை­மைக்கு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தது. இச்­சந்­தர்ப்­பத்தில் யாழி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த சின்­மயா மிஷன் சுவா­மி­களும் உட­னி­ருந்து நில­மை­களை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்­டு­வர முயற்­சி­களை மேற்­கொண்­ட­துடன் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்னர் உரை­யாற்­றினார்.

அவர்­ த­னது உரையில் தமிழ் மக்­க­ளு­டைய தொன்­மங்­களும் மர­பு­ரி­மை­களும் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மென வின­ய­மாக வேண்­டினார். கடந்த வாரம் ஜனா­தி­பதி அலு­வ­லகம் கன்­னியா வெந்­நீ­ரூற்று பகு­தியில் பௌத்த தாது கோபு­ரத்தை அமைக்­கும்­படி தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு ஆணை­பி­றப்­பித்­தி­ருந்த நிலையில் தொல் பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் மண்­டா­வெல 6..6..2019 திக­தி­யிட்ட கடிதம் மூலம் திரு­கோ­ண­மலை அரச அதி­ப­ருக்கு ஒரு கட்­டளை பிறப்­பி­ருந்­தார்.

அர­சியல் தலை­யீடோ அல்­லது எந்த தலை­யீ­டு­களோ ஏற்­பட்­டாலும் அதை கவ­னத்தில் கொள்­ளாது; பிள்­ளையார் ஆலயம் இருந்­த­வி­டத்தில் பௌத்த தாது கோபு­ரத்தை அமைக்கும் படி வழங்­கிய கட்­ட­ளைக்கு அமைய தொல் பொருள் திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் பிள்­ளையார் ஆலயம் அமைந்­தி­ருந்த இடத் தில் பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சி கடந்த வாரம் முன்­னெ­டுக் கப்­பட்ட நிலை­யி­லையே மேற்­படி கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இக்­க­வ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் மற்­றும் தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி தலைவர்; கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் திரு­கோ­ண­மலை நகர சபை உப்­பு­வெ­ளி­பி­ர­தேச சபை உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்டு தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர்.

இறு­தி­யாக தென்­க­யிலை ஆதீன குரு முதல்வர் அகத்­திய அடி­களார் ஊடக அறிக்கையொன்றை கூடி­யி­ருந்­த­வர்கள் முன் வாசித்தார். அவ்­வ­றிக்­கையில் கன்­னியா வெந்­நீ­ரூற்று பிள்­ளையார் கோவில் வர­லாறு கிழக்கு வாழ் தமிழ் மக்­களின் இருப்­புக்கு மட்­டு­மல்ல ஒட்­டு­மொத்த தமி­ழின இருப்­புக்கும் மிக அவ­சி­ய­மா­னது. சிங்­கள பௌத்த அர­சா­னது.

தமிழர் வர­லாற்றை மகா­வம்ச வர­லா­றாக திரிபு படுத்த முயற்­சிக்­கின்­றது. இதை தமி­ழர்­தா­ய­கத்தில் பல்­வேறு திணைக்­க­ளங்­களின் ஊடாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­வ­ரு­கி­றது. சிங்­கள பௌத்த மய­மாக்­கலில் சைவ ஆல­யங்கள் பாதிக்­கப்­ப­டு­வது யாவரும் அறிந்­த­வி­டயம். வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சிங்­கள பௌத்த மய­மாக்கம் மிக பாரிய அளவில் நடை­பெற்று வரு­கி­றது.

குறிப்­பாக முள்ளி வாய்க்கால் தளத்தில் வீரி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­ன்கிற நிலையில் அது தொடர்­பான எதிர்­வினை நேர்­மை­யான கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது;

தமிழ் சிவில் அமைப்புக்களிடையையோ இருப்பதாக தெரியவில்லை . கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பில் பல தரப்பினரிடமும் பேசியுள் ளோம். பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம்.

ஆனால் இதுவரைக்கும் அசமந்த போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது தொடர்பில் நாம் சந்தேகம் கொள்கிறோம். இனியும் இவ்வாறான நிலைமை தொடருமென்றால் மக்கள்மயப்பட்ட வன்முறையற்ற தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எமது போராட்டங்கள்தான் தீர்வாக அமையுமென்றால் அந்த வன்முறையற்ற அமைதி வழிப்போராட்டங்களுக்கு நாம் செய்ய ஆயத்தமாக வேண்டும் .நாங் கள்; வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.

இருந்த போதிலும் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையின் பல்லினத்தன்மையையும் தொடாந்து பேணுவதற்கு அரசு உறுதி செய்ய வேண் டுமெனத் தெரிவித்துள்ளாா்.