Breaking News

பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள் ளதுடன், 10 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பீகாரில் பருவ மழை பெய்து வருகின் றது. இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்ட எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்த போது, விளை யாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின் னல் தாக்கியுள்ளது.

இதனால், 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயி ரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.