Breaking News

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி படைத்த புதிய உலக சாதனை!

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, 20 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதுவரை உலக அளவில் எந்த ஒரு விளையாட்டுத் தொடரின் தொடக்கப் போட்டியும், இந்த அளவுக்கு பார்வையாளர்களைப் பெற்றதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 19ம் தேதி சென்னை-மும்பை அணிகள் மோதிய இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் 20 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 6 மாதங்கள் கழித்து இந்திய வீரர்கள் விளையாடியதும், 400 நாட்கள் இடைவெளியில் தோனி களமிறங்கியதுமே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.