Breaking News

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்!

#
இறையாண்மை உள்ள ஜனனாயக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் ஒளிவீச்சாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள். 

மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.  

எந்தவொரு அமைப்பினதும் பின்புலம் இன்றி தன்னெழுச்சியுடன் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் எடுத்த முயற்சியின் விளைவாகவே இச் சாதனை நிகழ்ந்தேறியுள்ளது.  

அத்தோடு 'இனவழிப்புப் புரிந்த சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்' என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.