Breaking News

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்கள்!



 நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அதன் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.

பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் பிரதிநிதிகள் நேற்றைய தினம் (22) பிற்பகல் பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

அமெரிக்க நிறுவனங்களுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்களை தயவு செய்து திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.