Breaking News

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை - ஆளும் தரப்பு!

 


ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்சவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுகூட மக்களை திரட்டும் சக்தி தங்களிடம் உள்ளதாகவும், பஷில் ராஜபக்ஷ சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். அது நடக்காது எனவும் 2015 இல் ராஜபக்சேக்களை வீழ்த்த பார்த்தனர்.

அதுவும் முடியாமல் போனது. நிச்சயம் நாம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர்களான விமல், கம்மன்பில போன்றவர்களே அரசாங்கத்தினை பயணத்தை குழப்பினர் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளனர்.