Breaking News

தேரரின் கைது தொடர்பிலான பிரதமரின் கருத்திற்கு எதிர்ப்பு!

ஞானசார தேரரின் கைது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து வெறுக்கத்தக்கதொன்றாகும் என சாந்தி பதனம் அமைப்பின் தலைவர் கொடபொல அமரகித்தி தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் கைது தொடர்பில் , இந்த நாட்டில் புத்தரக்பித்தாக்களுக்கும், சோமராமலாக்களுக்கும் இடமில்லை என பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்துக்கு இந்நாட்டின் இராணுவத்தினரின் விடுதலைக்காகவே ஆஜராகியிருந்தார் எனவும் அவர் தனது விசேட அறிவிப்பில் கூறியுள்ளார்.