Breaking News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட உத்தரவு!

 


அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு 

 வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஅறிவுறித்தியுள்ளார்.

நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே இந்த தீர்மானத்தை அவர் விடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வருகின்ற  செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.