Breaking News

முல்லைத்தீவில் பொதுமக்கள் காணியில் சட்டவிரோத விகாரை

முல்­லைத்­தீவு கொக்­கி­ளாயில் தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் சட்ட விரோ­த­மாக விகாரை அமைக்­கப்­பட்டு வரு­கிறது. முல்­லைத்­தீவு கொக்­கிளாய் வைத்­தி­ய­சாலைக் காணியின் ஒரு பகு­தி­யையும், பொதுமக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­க­ளையும் பாதை ஒன்­றையும் அப­க­ரித்து தேரர் ஒரு­வரால் படை­யினர் துணை­யுடன் குறித்த விகாரை அமைக்­கப்­ப­டு­வ­தாக பிரதேசவாசிகள் குற்றம்சுமத்துகின்றனர்.

காணிகள் அபகரிக்கப்பட்டு விகாரை கட்டப்படுவதையடுத்து, அந்த காணி உரிமையாளர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர். காணிகளிற்கான ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருந்தனர். மக்கள் அங்கு சென்றபோது, 20 க்கும் அதி­க­மான படை­யினர் விகாரை கட்டும் பணி­களில் ஈடு­பட்­டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விகாரையை கட்டும் தேர­ருடன் உரை­யாட வேண்டும் என மக்கள் கேட்­ட­போது, 

அவர் அங்­கில்லை என படையினர் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, காணி உரிமங்களை படையினரிடம் காட்டி, கட்டுமானப்பணிகளை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். உயர் அதி­கா­ரியின் பணிப்பின் பேரிலே அங்கே வந்­துள்ளோம், அவர்களிடம் சென்று பேசுமாறு அங்கிருந்த படையினர் பதிலளித்துள்ளனர். தேரர் கொழும்பு சென்­றி­ருப்­ப­தாக கூறி விட்டு விகா­ரையின் கட்­டு­மான பணி­களைத் தொடர்ந்­தனர்.

இதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மக்கள் திரும்பி வந்துள்ளனர். இந்த விடயத்தில் அரசியல் தலைவர்கள் தலையிட வேண்டுமென்று கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.