Breaking News

ரணில் வீட்டில் சுமந்திரனுக்கு சாப்பாடு ? (காணொளி இணைப்பு)

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில்
தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் காரசாரமான விவாதம் ஒன்று நேற்றும் இன்றும் கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற காரசாரமான நிகழ்வு ஒன்றில் த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

இந்த விவாதத்தின்போதே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மதிய உணவை மைத்திரி வீட்டிலும் இரவு உணவை மகிந்தவின் வீட்டிலும் உண்டுவருவதாகவும் காலையில் ரணில் வீட்டுக்கு செல்லமுடியாத நிலை இருக்கிறது ஏனெனில் அங்கு சுமந்திரன் என்நேரமும் நிற்பதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்தார். (33 ஆவது நிமிடத்திலிருந்து காணலாம்)

மற்றும் தமிழர் பலத்தை சிதைக்கும் சிறந்த ராஜதந்திரியான ரணில் இன்னும் சிறிதுகாலம் ஆட்சியில் இருந்தால் கூட்டமைப்பிலும் குழப்பத்தை உண்டுபண்ணி முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் பிரித்துவிடக்கூடய சாத்தியமிருப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது. 

முழுமையான காணொளி இணைக்கப்படுகிறது இணையவேகம் குறைந்தவர்கள் காணொளியில் 22ஆவது மற்றும் 33வது நிமிடத்திலிருந்து 2நிமிடங்கள் பார்க்கும்படி வேண்டப்படுகின்றீர்கள். 



இன்றைய நிகழ்வில்